×

மழை பெய்ததால் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல முடியவில்லை;அரசு பணி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்: மாரியப்பன் பேட்டி

சென்னை: பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மழை பெய்ததால் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது கவலையாக உள்ளது என மாரியப்பன் கூறினார். பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். தமிழக முதல்-அமைச்சரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். முதலமைச்சர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அரசு வேலை வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அரசு பணி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார். பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப்பதக்கம் கிடைத்ததில் சிறிது வருத்தம் அளிக்கிறது.

போட்டி நடந்தபோது டோக்கியோவில் மழை பெய்ததால் தங்கம் வெல்ல முடியவில்லை. அடுத்த பாராஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்  வென்ற  மாரியப்பனுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Para Olympics ,Chief Minister ,Mariappan , At the Paralympics, gold, Mariappan, as it rained
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...