×

டோக்கியோ பாராலிம்பி்க்ஸ்: பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யத்திராஜ்..!

டோக்கியோ: பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எல்-4 பிரிவில் பேட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது.

இன்று நடந்த பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  18 பதக்கங்களை வென்றுள்ளது.

மேலும், 38வயதான சுஹால் உத்தரப்பிரதேசம் கவுதம் புத்தநகர் மாவட் ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tokyo Paralympics ,Suhaz Yadraj , Paralympics, Badminton, Silver Medal, Suhas Yatiraj
× RELATED டோக்கியோ பாராலிம்பிக்: டேபிள்...