×

அரசு ஊழியர் வீட்டில் 50 சவரன் அபேஸ்: மர்மநபர்களுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சுதர்சன் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் கவிதா, உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த வைர நெக்லஸ், கம்மல் உள்பட 50 சவரன், நகைகள் வெள்ளி பொருட்கள், ரூ.1.3 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை வலைவிசி தேடி வருகின்றனர்.

Tags : Government Employee Home 50 Shaving Abbey: Web for Mysteries
× RELATED விவசாயி சின்னத்தில் போட்டியா?...