×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்களிடம் தனிப்படையினர் விசாரணை

கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்களிடம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் விசாரித்து வருகிறார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது டிஐஜி அலுவலகத்தில் இந்த வழக்கு சம்மந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படையானது தற்போது விசாரணையானது நடத்தி வருகின்றனர். அதில் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் இந்த விசாரணையை தற்போது நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 வாகனங்களில் வந்த தனிப்படையினர் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், சேலத்தில் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் உறவினர்களிடம் இந்த விசாரணையானது நடந்து வருகிறது. இந்த தனிப்படையில் அடங்கியுள்ள பெண் காவலர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் இந்த விசாரணை வளையத்தில் கனகராஜின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த வழக்கு சம்மந்தமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த 5 தனிப்படைகளும் வெவ்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலையில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : Qaeda ,Kanagaraj ,Jayalalita , Kodanad, murder, robbery
× RELATED பாலியல் வழக்கு: பாஜக மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரனை நீக்க பரிந்துரை