×

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்: டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரமோத் பகத்..!!

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இம்முறை முதல் முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவு பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒடிசா மாநிலம் அட்டபிரா பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து. இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக்கில் 4-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.


Tags : India ,Brahmoth Bagat ,Tokyo Paralympic Players , India, Paralympics, Gold
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...