×

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாடா ஏசி வாகனம் விபத்து!: 2 பேர் பலி..6 பேர் காயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியல் டாடா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். கல்லூத்து கிராமத்தில் இருந்து உத்தப்பநாயக்கனூரில் இல்ல விழாவுக்கு சென்ற டாடா ஏசி வாகனம் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கல்லூத்து கிராமத்தை சேர்ந்த தங்கம்மாள், தியாஸ்ரீ என்ற 15 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Tata AC ,Usilampatti ,Madurai district , Usilampatti, Tata AC, 2 killed
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...