×

அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு

இலுப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. இவர் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டில் சமைப்பதற்காக வீட்டிற்கு அருகில் அடுக்கி வைத்திருந்த விறகை எடுக்க சென்றார். அப்போது விறகுக்குள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Annavasal , Mountain snake swallowing chicken near Annavasal
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...