×

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர்வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து 11,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியாற்றில் கடந்த ஒருவார காலமாகவே 10,000 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் வந்துகொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது 14,000 கனஅடியாக இருந்து வந்தது. தற்போது தொடர்மழை மற்றும் நீர்திறப்பு காரணமாக நீர்வரத்து 19,000 கனஅடியாக இருந்து வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான தண்ணீர் தேவை என்பது குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது. அதேபோல தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா 30 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது 30 டிஎம்சி தண்ணீரும் திறக்கப்பட்டால் மேலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : Karnataka ,TN border , Irrigation, Mettur Dam, hogenakkal
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!