திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில் தங்கக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை ஆய்வாளர் அசோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த வாரம் திருச்சியில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2,275 கிராம் தங்கம் சிக்கிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்து ஓராண்டுகள் ஆன நிலையில் அசோக் மீது சுங்கத்துறை ஆணையர் அனில் நடவடிக்கை எடுத்துள்ளார்.