×

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தின் நுழைவு சாலை அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த சிலையை, மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர், சிலை சேதமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்ததும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பின்னர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து செய்யூர் போலீசார், செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் விசிக மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மாநில துணை பொதுச் செயலாளர் எழில் கரோலின்,  மகளிர் அணி தலைவர் மகிழினி, மண்டல பொறுப்பாளர் விடுதலை செழியன், மாவட்ட துணை செயலாளர் ஈழவேந்தன், செய்யூர் தொகுதி பொறுப்பாளர் பொன்னிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vizika protest , Vizika, demonstration, idol
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி