×

கொரோனாவை கட்டுப்படுத்தாததால் பதவி விலகுகிறார் ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: கொரோனாவை சரியாக கையாளத் தவறியதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியிலிருந்து விலக இருக்கிறார். ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார். அவருக்குப் பின், யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் குறித்து அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் பெரும்பாலான ஜப்பான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நேற்று அறிவித்துள்ளார். தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார். அந்த வகையில், சுகாவின் ஓராண்டு ஆட்சி முடிவுக்கு வர இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. கட்சியின் அடுத்த தலைவரே புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

Tags : Prime Minister of Japan , Because the corona is not controlled The Prime Minister of Japan resigns
× RELATED பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி...