பெங்களூரு: கன்னட நடிகர் சுதீப்புக்கு நேற்று 50வது பிறந்த நாள். இதை சிறப்பாக கொண்டாட கர்நாடகா பல்லாரி மாவட்டம், சண்டூர் கிராமத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள், எருமை மாடு ஒன்றை வீச்சரிவாள் மூலம் பலி ெகாடுத்தனர். அதன் ரத்தத்தை சுதீப் கட் அவுட்டின் மீது கொட்டி ரத்தபிஷேகம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 25 ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.