×

கேரளா எல்லையுடன் ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி என்ற இலக்கோடு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லி: கேரளா எல்லையுடன் ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி என்ற இலக்கோடு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, 2 கோடி கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட 10 கோரிக்கையை வைத்துள்ளோம். தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Kerala ,Minister ,Ma. Subramanian , Ma. Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...