×

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதியில் ஒரு கல்லூரியை கூட உருவாக்கவில்லை!: அமைச்சர் பொன்முடி ஆச்சர்யம்..!!

சென்னை: 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதியில் ஒரு கல்லூரியை கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை மாவட்டத்தில் 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பதாகவும், 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்திருக்கும் செல்லூர் ராஜூ, தற்போதைய முதலமைச்சரின் கேட்டிருக்கிறார் என்றும் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் புதிய அரசு கல்லூரி அமைக்க 34 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுக்கு 2.25 கோடி ரூபாயும், கட்டுமான  ரூ.12 கோடியும் தேவை என்று அவர் விளக்கம் அளித்தார்.


Tags : Cellur Raju ,Minister ,Ponmudi , Cellur Raju, College, Minister Ponmudi
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...