மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 58,081 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 17,300 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் தொட்டது.