×

இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேருக்கு கொரோனா: 34,791 பேர் டிஸ்சார்ஜ்: 366 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..! ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.40 லட்சத்தை நெருங்கியது. அதே போல், பாதிப்பு 3.29 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 45,352 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,289 ஆக உயர்ந்தது.

* புதிதாக 366 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,791 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,99,778 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 97.45% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் இதுவரை 67,09,59,968 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,India ,Union Health Department Report , India, Corona, Union Health Department, Report
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!