×

சென்னையில் இருந்து 8 மாதத்திற்கு பின் லண்டனுக்கு விமானம் சென்றது

சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின், சென்னையில் இருந்து லண்டனுக்கு சென்ற முதல் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 162 பயணிகளுடன் ஒன்றரை மணி நேரம் தாமதமாக நேற்று புறப்பட்டு சென்றது.கொரோனா தொற்றால் கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 8 மாத இடைவெளிக்கு பிறகு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. லண்டனில் இருந்து 189 பயணிகளுடன் அந்த விமானம் சென்னை வந்தது.

இதையடுத்து, நேற்று காலை அந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 158 பயணிகள், 4 கைக்குழந்தைகள் உட்பட 162 பேர் பயணித்தனர். இந்த விமானம் அதிகாலை 5.31 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால் தாமதமாக காலை 7.04 மணிக்கு புறப்பட்டது. தாமதத்திற்கான காரணம் பற்றி அறிவிக்கப்படவில்லை.



Tags : Chennai ,London , From Chennai To London after 8 months The plane went
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...