சென்னை: தமிழ்நாடு முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போன வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.