×

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை ஒன்றிய அரசு விற்கக்கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுத்துறை நிறுவன சொத்துக்களை ஒன்றிய அரசு விற்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் அனைவருடைய சொத்தாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுச்சொத்துக்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுப்படும் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உயிர் தியாகம் செய்த போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் காட்டப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் காட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags : Union Government ,Q. Stalin , Property, dmk
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...