சட்டப்பேரவையில் வீட்டுவசதி, சமூகநலத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி பேசியதாவது: ஆணவ கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றிட வேண்டும். குடிநோயாளிகள் உயிரோடு இருந்தாலும் சரி அல்லது அவர்கள் இறந்தாலும் கூட. அவர்கள் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கென ஒரு சிறப்பு திட்டத்தை அரசு வகுத்திட வேண்டும்.
பெண்களுக்கான நலத்திட்டத்தை முன்னெடுக்கும் போது, அதற்கு வைத்திருக்கும் கண்டிஷன்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். பெண்களுக்கான பணியிடங்களில் சட்டப்படி செய்து தர வேண்டிய பல அடிப்படை வசதிகள், அரசு பணியிடங்களிலேயே இருப்பதில்லை. எனவே, எனவே, அரசு அது பற்றிய ஒரு விரிவான முடிவை எடுக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.