சென்னை: போக்குவரத்துத் துறை இணை ஆணையர் அனைத்து மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்நீதிமன்றம் உத்தரபடி, வாகன பதிவில் ஈடுபடும் அனைவரும் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை காப்பீடு நிறுவனங்கள் மற்றும் உங்களது எல்லைக்குள்பட்ட வாகன விநியோகஸ்தர்களுக்கும் வழங்க வேண்டும். வாகன பதிவின்போது காப்பீட்டுச் சான்று, உயர்நீதிமன்ற உத்தரவுபடி உள்ளதா என சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கட்டாயம் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.