×

துணை நகரங்கள் உருவாக்க திட்டம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பதாவது: தொழிற்சாலைகள், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, சுற்றுச்சூழல், கல்வி போன்ற துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளால் நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஒழுங்குபடுத்தவும் ஒருங்கிணைந்த நகரியங்களுக்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Minister Muthusamy , Plan to create sub-cities: Announcement by Minister Muthusamy
× RELATED ஈரோட்டில் ‘ஈஷா கிராமோத்சவம்’:...