×

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு வந்த ஜோடிகள்: தேம்ஸ் நதிக்கரையில் இசைப் பிரியர்களின் ‘காம களியாட்டம்’: குப்பையாக குவிந்து கிடக்கும் ஆணுறை, அழுக்கு உள்ளாடை, பீர் பாட்டில்

லண்டன்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேம்ஸ் நதிக்கரையில் நடந்த இசைப்பிரியர்களின் காம களியாட்ட விழாவில் பங்கேற்றவர்கள், தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு சென்றதால், விழா ஏற்பாட்டாளர்கள் புலம்பி வருகின்றனர். இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கரையில் இசைப் பிரியர்களுக்கான வாசிப்பு  மற்றும் லீட்ஸ் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை  வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறும். கொரோனா பரவல் அச்சம்  காரணமாக கடந்தாண்டு இந்த விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்தாண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வரக்கூடியவர்கள் தங்களது துணைகளை  (ஆண் அல்லது பெண்) அழைத்துக் கொண்டு வருவார்கள். உடன் தற்காலிக ‘டென்ட்’  கொட்டகை உள்ளிட்ட பொருகளையும் கொண்டு வருவார்கள். மூன்று நாட்களாக இசையை  வாசித்துக் கொண்டே தேம்ஸ் நதிக்கரையில் தங்களது ஜோடிகளுடன் உல்லாமாக  இருப்பார்கள்.

இதில், ஓரின சேர்க்கையாளர்களும் அடங்கும். காம களியாட்டங்கள்  நிறைந்த இசை விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில்  திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் லில்லி ராபின்ஸ், தனது சமூக தளத்தில்  அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில், ‘கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் இசை விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்று வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. விழா முடிந்தவுடன் தங்கள் உடமைகளை விழா  முடிந்தவுடன் எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினோம். ஆனால், பலர் அப்படியே  போட்டுவிட்டு சென்று விட்டனர்.
ஆயிரக்கணக்கான கூடாரங்களில் முகாமிட்டிருந்த அவர்கள், தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கூடாரங்கள், அழுக்கான உள்ளாடை, பயன்படுத்தப்பட்ட டம்பான்கள்,  பயன்படுத்தப்பட்ட ஆணுறை, நைட்ரஸ் ஆக்சைடு குப்பிகள், செக்ஸ் மருந்துகளின் பைகள்,  ஐபோன்கள், பாஸ்போர்ட், ஆண்குறி பலூன்கள், பெக்லெஸ், சுய இன்ப கருவிகள், உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

கிட்டதிட்ட ஆறு மைதானங்களில் விழாக்கள் நடந்ததால், ஒவ்வொரு கூடாரத்திலும் 25 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியுள்ளோம். இவற்றை எரிப்பதால் வெளியேறும் கார்பன்டை ஆக்சைடில் இருந்து மாசு ஏற்படும். கிட்டதட்ட 875 டன் பிளாஸ்டிக் குப்பை கிடைக்கும். இவை முழுமையாக சிதைவதற்கு 10,000 ஆண்டுகள் வரை ஆகும். பல முறை எச்சரித்தும், அப்படியே போட்டுவிட்டு சென்றதால் எவரும் தூய்மைப் பணிக்கு கூட வரமறுக்கின்றனர். இவற்றை மறுசுழற்சி செய்யும் ஆலை நிர்வாகத்தினரிடம் பேசியுள்ளோம்’ என்றார். இதுகுறித்து சுதந்திர விழாக்களின் சங்கம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, ‘இங்கிலாந்து முழுதுவம் இசை வாசிப்பு விழாவிற்காக 2,50,000 கூடாரங்கள் அமைக்கப்படும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். மூன்று நாட்களாக உல்லாசமாக இசையை வாசித்துக் கொண்டு ஜாலியாக இருப்பர். ஆனால், அவர்களால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. இந்த கூடாரங்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யும் வகையிலான ெபாருட்களை பயன்படுத்த வேண்டும். இசை வாசிப்பு திருவிழா முடிந்துவிட்டது. ஆனால், பயன்படுத்தப்பட்ட ஆணுறை முதல் கைவிடப்பட்ட கூடாரங்கள் வரை ஏக்கர் கணக்கில் குப்பைகளாக கிடக்கிறது’ என்று கவலையுடன் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் கூடாரங்கள், அழுக்கான
உள்ளாடை, பயன்படுத்தப்பட்ட டம்பான்கள்,  பயன்படுத்தப்பட்ட ஆணுறை, நைட்ரஸ்  ஆக்சைடு குப்பிகள், செக்ஸ் மருந்துகளின் பைகள்,  ஐபோன்கள், பாஸ்போர்ட், ஆண்குறி  பலூன்கள், பெக்லெஸ், சுய இன்ப கருவிகள், உணவு பொருட்கள் அடைத்து  வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை  அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.


Tags : Thames , Corona vaccine , pairs
× RELATED லண்டன் தேம்ஸ் ஆற்றில்...