மேலூர்: மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். எட்டிமங்கலம் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டக்கோவில் பாஸ்கரன் பலியாகியுள்ளார். படுகாயமுற்ற இருவரும் மேலூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.