×

மயிலாடுதுறை அருகே கடலில் இறந்து மிதந்த திமிங்கல சுறா

கொள்ளிடம் : மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே பழையாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கல சுறா பிரேத பரிசோதனைக்கு பிறகு வனத்துறை காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது துறைமுக பகுதியில் 5.5 மீ. நீளமும், 2.40 மீ. அகலமும், 1.5 டன் எடையுடன் திமிங்கல சுறா இறந்து மிதந்துள்ளது. அதனை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கடலோர காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இறந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் மிகவும் அரிய வகை திமிங்கல சுறா வகையை சார்ந்தது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் மூலம் திமிங்கல சுறா பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

Tags : Mayiladuthurai , Dolphin, Kollidam,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...