×

பாலியல் தொழிலுக்கு எஸ்ஐயை அழைத்த 2 புரோக்கர் கைது

ஆவடி: திருமுல்லைவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர்  நேற்று முன்தினம் இரவு மப்டியில் திருமுல்லைவாயல் ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்து திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனியில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அங்கு பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிப்பதாகவும்  ஆசை வார்த்தைக்கூறி அவரை அழைத்துள்ளார். இதனையடுத்து, அவர் ரூ.2 ஆயிரத்தை ஏடிஎம்மில் எடுத்துக்கொண்டு பாலியல் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு நபர் அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு விடுதிக்கு உள்ளே அனுப்பினார்.

அப்போது, அங்கு இரண்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சங்கர் திருமுல்லைவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலியல் புரோக்கர்களான சென்னை கே.கே.நகர் மேற்கு வன்னியர் தெருவை சேர்ந்த பரஸ்மால் ஜோஷி(45), தஞ்சாவூர் மாவட்டம் திருச்சென்னம்பூண்டி கிராமம் கீழப்படுகை தெருவை சேர்ந்த செந்தில்குமார்(52) ஆகியோரை கைது செய்தனர். மேலும், வீட்டில் அடைத்து வைத்திருந்த இரண்டு பெண்களை மீட்டு சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags : 2 brokers arrested for calling SI for sex work
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை