சென்னை: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருப்பதால் அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.