திருப்பூர் : திருப்பூரில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி குருவாயூரப்பன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பூர்ஊத்துக்குளி ரோட்டில் பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
6 மணிக்கு அபிஷேக பூஜையும் அதைத் தொடர்ந்து கோமாதா பூஜையும் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து காலை 7 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர்.