×

உளுந்தூர்பேட்டை - செங்குறிச்சி சுங்க சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் உயர்வு!: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை - செங்குறிச்சி சுங்க சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு விவரம்:

* ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட தற்போது ரூ.5 முதல் ரூ.35 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பலமுறை சென்று வர ரூ.80ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* இலகுரக வாகனங்கள் பலமுறை சென்று வர கட்டணம் ரூ.140ல் இருந்து தற்போது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* பேருந்து, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பலமுறை சென்று வர கட்டணம் ரூ.280ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் பலமுறை சென்று திரும்ப கட்டணம் ரூ.445ல் இருந்து ரூ.480 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

நாளை முதல் சுங்க சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கு கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Inunturpate ,Sengurichi , Ulundurpet - Red Cross, Customs, Customs
× RELATED கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு