×

சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: தலைமறைவாக இருந்த கணவன் கைது

சேலம்: சேலத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் மீது ஆசிட் வீசிய கணவர் யேசுதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் கூறியுள்ளார்.  விவாகரத்து கேட்டு, தனது தாயுடன் காவல் நிலையம் சென்றுவிட்டு திரும்பும் போது பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.  நேற்று சம்பவம் நடைபெற்ற நிலையில், இன்று காலை பெண்ணின் கணவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  பெண்ணின் தாய்க்கு சேலம் அரசு மருத்துவமனையில்  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சேலம் அருகே தனது தாயுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் யேசுதாஸ் ரேவதி மீது ஆசிட் வீசியுள்ளார். எனவே ரேவதியை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரது கணவர் யேசுதாஸை தனிப்படை போலூசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Revathi ,Salem , In Salem, acid, woman, fatality, husband, arrested
× RELATED வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்;...