×

தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் வீரியம் கொண்ட சி12 வகை கொரோனா வைரஸ் : 3ம் அலை தொடங்கவிட்டதோ என உலக நாடுகள் அச்சம்!

டெல்லி : தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் தாண்டி டெல்டா வகை வைரஸை போல மிக தீவிரமாக பரவக்கூடிய சக்தி கொண்ட சி12 வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளில் பரவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்ட பிறகு புதிய வகை வீரியம் மிக்க கொரோனா வைரஸ் மாறுபாடுகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் 2ம் அலைக்கு  காரணமான டெல்டா வகை வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்துகிறது.

தற்போது அந்த வரிசையில் வீரியம் மிக்க சி12 வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் தொற்று நோய்க்கான தேசிய நிறுவன ஆய்வாளர்கள் சி12 மரபணு மாற்ற கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் குறித்த மதிப்பிடப்படாத ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டதாக சி12 வகை வைரஸ் இருக்க வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே ஆன்டிபாடிகளை உருவாக்கிய நோயாளிகளையும் மீண்டும் தொற்றும் திறன், சி12 வகை வைரஸ்களுக்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.


Tags : தென் ஆப்ரிக்கா
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது