×

மேற்குவங்கத்தில் திரிணாமுல்லில் மீண்டும் இணைந்த பாஜ எம்எல்ஏ

கொல்கத்தா: பாஜ பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய பிஷ்னுபூர் எம்எல்ஏ மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிஷ்னுபூர் நகர திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக இருந்த தன்மோய் கோஷ், மார்ச் மாதம் பாஜ.வுக்கு தாவி, கடந்த தேர்தலில் பிஷ்னுபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இந்நிலையில், மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு முன்னிலையில் நேற்று அவர் மீண்டும் திரிணாமுல்லில் இணைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோஷ், ``மேற்கு வங்க மக்களின் நலனுக்காக அனைவரும் திரிணாமுல்லில் சேர வேண்டும். முதல்வர் மம்தாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்க மக்களை பாஜ சிறுமைப்படுத்துகிறது. பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் பாஜ, மக்களிடையே குழப்பம் விளைவிக்கிறது. இதனால்தான், மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளேன்,’’ என்று கூறினார்.

Tags : Bajaj ,MLA ,Trinamool ,West Bengal , West Bengal, Trinamool, BJP MLA
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி