பிதோராகர்: உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் அருகே ஜும்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 7 பேரில் 3 குழந்தைகளின் சடலத்தை இடிபாடுகளில் இருந்து மீட்பு படையினர் மீட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.