×

கிண்டி ஐடிஐ.யில் செப்.15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட அறிக்கை: கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற் பிரிவுகளில் மாணவர்சேர்க்கை செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சேரலாம். அவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-22501350, 9499055649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Kindi , Kindi ITI, Sep.15, Student, Admission
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது