×

காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்: விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை:‘தமிழகம் முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்’ என்று விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளை அகற்றப்படும். தமிழக அரசுக்காக தனி நிதியம் ஒன்றினை பேங்க் ஆப் தமிழ்நாடு என்ற வங்கியை துவக்கிட முனைந்திருப்பதற்காகவும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும். மேலும் இதர காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்றிட வேண்டும்.  

மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி கடைகளுக்கான வாடகை விகிதத்தை, தமிழகம் முழுவதும் மறுஆய்வு செய்து வாடகை சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரே சீரான வாடகையை உள்ளாட்சிக் கடைகளுக்கு நிர்ணயித்து, உள்ளாட்சிக் கடை பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கான செஸ் வரியையும், இதர மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் வேளாண் விளைபொருட்களுக்கும் செஸ்வரி வசூலிப்பதை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். மின்எடை சாதனங்களை ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்கும் நிலைமைய மாற்றி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமங்களை புதுப்பிக்கும் வகையில் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

Tags : Wickramarajah , Expired, customs, to remove, Wickramarajah
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...