×

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அரசாணை வெளியீடு

சென்னை: இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்றப் பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இலங்கை தமிழர்களை அகதிகள் என்று கூறாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். ஏனென்றால் அவர்கள் அநாதைகள் அல்ல. நாம் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்.ஆகவே அந்த உணர்வோடு அகதிகள் என்று அழைக்காமல், அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும்’’ என்று கூறினார்.

இந்த நிலையில் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தப்படி, இலங்கை அகதிகள் முகாம் என்பதை ‘‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’’ என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka, Tamil Rehabilitation, Government, Publication
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...