×

திருப்பதியில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளை நடக்கிறது

திருமலை: துவாபர யுக நாயகரான ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி 30ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை இரவு 8மணி முதல் 10 மணிக்கு இடையே கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதில் சர்வ பூபால வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமியை கொலு வைத்து நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பின்னர் உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி சமேத ஸ்ரீதேவி பூதேவி  தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மேலும், அன்று மதியம் கோகர்பம் அணை எதிரே உள்ள காளிங்க நர்த்தன பூங்காவில்  உள்ள கிருஷ்ணருக்கு 11 மணி முதல் 12 மணிக்கு இடையே  அபிஷேகம் நடைபெற உள்ளது. 31ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்கு இடையே மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில்  கிருஷ்ணர் மற்றொரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்.


Tags : Srikrishna Genmashtami ,Tirupati , In Tirupati, Srikrishna, Genmashtami, is happening
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...