×

பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து சிறுமி பலாத்காரம்: ஐ.டி.ஐ. மாணவர் கைது

கோவை: சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ஐ.டி.ஐ. மாணவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். இவருக்கும் வெள்ளலூரை சேர்ந்த வெள்ளிமலை (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வெள்ளிமலை ஐடிஐ தொழில் கல்வி முதலாம் ஆண்டு படித்து வந்தார். செல்போனில் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து பல இடங்களிலும் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவர் வெள்ளிமலை அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். போலீசார் நோட்டமிட்டு அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அங்கு அடைத்து வைத்து வெள்ளிமலை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவர் மீது கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Tags : ITI , Girl, Rape, I.T.I. Student, arrested
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...