×

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 28ம் தேதி பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஜோலார்பேட்டையில் தங்கியிருந்து சிறுநீரக தொற்று சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 2 மாதம் பரோல் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தாயாரின் மனுவை ஏற்று  பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.



Tags : Perarivalan , Extension of parole for Perarivalan
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!