×

ஒன்றுபட்டு நின்றால் மேகதாது விவகாரத்தில் வெற்றி நிச்சயம்.. எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது : அமைச்சர் துரைமுருகன் உறுதி!!

சென்னை : மேகதாது விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இறுதி வரை போராடினால், நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்று நீர்வளத்துறை ஆமிச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர் செல்வம், கர்நாடக அரசு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறினார். இதே போன்று மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மேகதாது விவகாரம் தொடர்பாக அரசின் செயல்பாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கட்சி வித்தியாசம் இன்றி தற்போது எப்படி ஒரு நிலையில் இருக்கிறோமோ, இது போன்று இறுதி வரை நின்றால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது என்றும் கூறினார்.இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றார். கர்நாடக முதல்வர் நீதி தவறமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறிய துரைமுருகன், மறுக்க வேண்டியதை மறுப்போம், வாதாட வேண்டியதை வாதாடுவோம் என்றார்.


Tags : Minister ,Durimurugan , அமைச்சர் துரைமுருகன்
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...