×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1,988 நெல் மூட்டைகள் கொள்முதல்

ராணிப்பேட்டை :  அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1,988 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல்லை மூட்டைகளில் கட்டி லாரி, டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.

அதன்படி, விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 1,988 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.  நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம்: ஏடிடி 37 வகை நெல் ₹809-₹1051க்கும், கோ 45 வகை நெல் ₹945க்கும், ‌‌கோ 51 வகை நெல் ₹766-₹1025க்கும், ‌‌சோனா வகை நெல் ₹1206-₹1309க்கும், ஐஆர் 50  நெல் ₹886-₹946க்கும், சூப்பர் பொன்னி நெல் வகை ₹859-₹985க்கும், 606 வகை நெல் ₹986-₹1106, ‌‌என்.ஆர்.என் வகை நெல் ₹986க்கும் ‌‌விற்பனை செய்யப்பட்டது என்று அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Tags : Ammoor Regulatory Sales hall , Ranipettai: 1,988 bundles of paddy were procured in a single day at Ammoor Regulatory Sales Hall. Next to Ranipet
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...