சென்னை: கடந்த ஆட்சியில் சென்னை கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்ததில் ரூ.1,886 கோடி நஷ்டம் என சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சாலை பணிகள் முறையாக நடைபெற்றதாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.