×

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் யார்? கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட சொன்ன அண்ணாமலை ஆடியோ ரிலீஸ்

* அடுத்தடுத்து வெளியாகும் வீடியோ, ஆடியோவால் பரபரப்பு
* பாஜவில் விஸ்வரூபமெடுக்கும் பாலியல் விவகாரம்



சென்னை: தமிழக பாஜ தலைவர் கே.டி.ராகவனின் பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜ மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன், மாநில மகளிரணி பெண் நிர்வாகியுடன் வீடியோ காலில் பேசியபடி, பூஜை அறை முன் அமர்ந்து அவரது ஆடையை களைந்து, காம உணர்ச்சியோடு உதட்டை கடித்தப்படி சுய இன்பம் அனுபவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அக்கட்சியில் இருந்த மதன் மற்றும் மகளிரணி நிர்வாகி வெண்பா உட்பட சிலர் சேர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டனர். வீடியோ வெளியிடுவதற்கு முன் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை, மதன் சந்தித்து கே.டி.ராகவனின் காம லீலைகளை ஆதாரத்துடன் புகாரளித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். அதற்கு அண்ணாமலை, ‘‘வீடியோ ஆதாரத்தை என்னிடம் கொடுங்கள். அதை டெல்லி தலைமைக்கு அனுப்பி விசாரிக்கிறோம். இது பெரிய வேலை. குறைந்தது 6 மாதம் ஆகும்’’ என கூறி தட்டிக்கழிக்க பார்த்துள்ளார்.  

இரு முறை நேரில் சந்தித்து, மதன் முறையிட்டும், ஆதாரத்தை தங்களிடம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது என அண்ணாமலை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, மூன்றாவது முறையாக வாட்ஸ் அப்பில் அண்ணாமலைக்கு, மதன் மெசேஜ் அனுப்பி, வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டார். அதற்கு அவர், ‘‘அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீடியோவை வெளியிடுங்கள். எந்த கட்டுப்பாடும் இல்லை’’ என கூறி உள்ளார். இதையடுத்தே, கே.டி.ராகவன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ விவகாரம் பாஜவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 கே.டி.ராகவனின் அருவருப்பான செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில், பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மலர்கொடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகள் தெரிவித்துள்ளதால், மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆபாச வீடியோ வெளியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் உள்ள பாஜவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மதன். கே.டி.ராகவன் வீடியோ தொடர்பாக, அண்ணாமலையுடன் பேசும்போது ரெக்கார்டு செய்யப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆடியோவில், ‘‘கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவரும் இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கும் தெரியும்’’ என்று கூறும் அண்ணாமலை ஒவ்வொருவரின் ரகசியத்தை புட்டுப்புட்டு வைக்கிறார். இதனால், பாஜவில் என்ன தான் நடக்கிறது, எவ்வளவு ஆண்டுகள் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் அனைத்தும் தலைமைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மதன் வெளியிட்டுள்ள 40 நிமிட வீடியோ விவரம்:  முதலில் வீடியோ தொடர்பாக மதன் பேசுகிறார். அண்ணாமலை நேற்று என் பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு நான் விளக்கம் தர வேண்டும். வீடியோ தொடர்பாக இரண்டு முறை அண்ணாமலையை சந்தித்தேன்.

அப்போது நான் பதிவு செய்த ஆடியோக்களை வெளியிட உள்ளேன். அவர் என்னென்ன பேசினார். என்னென்ன என்கிட்ட பேரம் பேசினார். கட்சி தலைவர்களை பற்றி எல்லாமே எனக்கு தெரியும். அவங்க என்னெல்லாம் பண்றாங்கன்னு சொன்னாரு என்று அண்ணாமலை கூறுகிறார். தினமலர்ல இவர் போகும்போது ஆதிமூலமும், கோபால்ஜியும் என்னென்ன சொன்னார்கள் என்று பதிவு பண்றாரு. காயத்ரி ரகுராம் மற்றும் குஷ்பு பற்றி சொல்லியிருக்காரு. இதை வெளி கொண்டு வந்தால் நான் உங்கள் கையில் கால்ல கூட விழுந்துடுவேன். நம்ம கட்சிக்கார பொண்ணு, குட்டி ஸ்கிரீன்ல இருக்கிற முகம் தெரியாத பொண்ணுக்காக ஜஸ்டிஸ் வரும். இந்த வீடியோவ போட்டு விட்டுடுங்க. போட்டுவிட்டு சேஃபா இருங்க. நீங்க எல்லாமே பத்திரமா இருக்கணும். அப்படிங்கிற மாதிரி பேசினார். எண்ட் டூ எண்ட் ஒரு மீடியா கோவாடினேட்டர் மாதிரி இந்த வீடியோ வெளியே வர காரணமானவர் அண்ணாமலை.

 பல பெண்களின் பிரச்னைகளுக்கு பெரிய காரணமாக அண்ணாமலை இருக்க போகிறார். அவர்தான் இந்த வீடியோவை போட சொன்னார் என்பதற்கான திண்ணமான எல்லா ஆடியோக்களும் இப்போ அவரு வாய்ஸ்லே வெளியாக போகிறது.  இது இல்லை என்று சொன்னால், வீடியோவும் வெளியிடலாம் என்று தெளிவாக இருக்கிறோம். பார்த்துகலாம். ஃபர்ஸ்ட் நான் போட உள்ள ஆடியோவில், இவர் (மதன்) அந்த வீடியோவை என்னிடம் காண்பிக்கவில்லை. அப்படிங்கிறாருல. நான் காட்சிப்படுத்தியதற்கான ஆடியோவை நீங்களே பாருங்க.

கே.டி.ராகவனின் வீடியோ குறித்து அண்ணாமலை, மதன் பேசும் முதல் ஆடியோவை வெளியிடுகிறார்.
மதன்: வீடியோ கால் ஃபுல்லாவே காட்டுறேன்.
அண்ணாமலை: இது என்ன வீடியோ காலா.
மதன்: இல்ல.. இல்ல.. இது 3 நிமிஷம்  ஓடும். வீடியோ காலில் எல்லாமே நியூடா பண்றாங்க.
(அண்ணாமலையிடம் வீடியோ முழுவதுமாக போட்டு காண்பிக்கப்படுகிறது)
அண்ணாமலை: பிரதர் கொஞ்ச நேரத்திற்கு யாரையும் உள்ளே விட வேண்டாம். உள்ளே விட வேண்டாம். கொஞ்சம் வெளியே இருங்கள். வெளியே இருங்கள். கேட்டை பூட்டுங்கள். (உடனே, கதவு அருகில் இருந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டு கதவு மூடப்படும் சத்தம் கேட்கிறது)
மதன்: உங்கிட்ட காட்டுறதற்கு தான் நான் ஒரு முறை அரவக்குறிச்சி வந்தேன். 7 பேர் கொண்ட 11 வீடியோ இருக்கும். ஏஎன்எஸ் பிரசாத்தை (செய்தி தொடர்பாளர்) பற்றி மட்டுமே 3 வீடியோ இருக்கு. கீப் மட்டுமே 15 பேர் இருக்காங்க.
அண்ணாமலை: எல்லாம் வேற வேற வீடியோ மிக்ஸ் பண்ணி இருக்கீங்களா. இல்ல ஒரே வீடியோ தானா.
மதன்: 15 காலும் நாங்க தனித்தனி ஸ்சோர்ஸா வச்சு இருக்கோம். நாங்க ஒரு 3 இடத்தில ஸ்சோர்ஸ் செட் பண்ணி வெச்சு இருக்கோம். எங்களுக்கு எதாவது பிரச்னை வந்ததுனா... (போன் அடிக்கும் சத்தம் கேட்கிறது). நான் பத்திரிகையில் இருந்து வீடியோ வெளியிட்டா என்னை தூக்கிடுவாங்கனு தெரியுமே. சுவாமி முன்னாடி உட்காந்து ஒரு காரியம் பண்றான் பாருங்க. இத்துடன் முதல் ஆடியோ முடிக்கிறது.
2வது ஆடியோவை வெளியிடுகிறார்.
அண்ணாமலை: நான் ஒரு ஆப்பர்சுனட்டி கிரியேட் பண்ணி கொடுக்குறேன். அநேகமாக டெல்லி. தமிழ்நாட்டில் இல்லை.  இதை கண்டிப்பாக கட்சியில் உள்ள முக்கியமானவர் சிலரிடம் காட்ட வேண்டும். இந்த மாதிரி கேவலமான செயல்களை  பார்த்து அவங்க புரிஞ்சுக்கணும்.
மதன்: நான் சேர்ந்திருக்கும் கம்பெனியை பத்தி உங்களுக்கு தெரியும்.
அண்ணாமலை: புரியல
மதன்: இது, எங்க பத்திரிகையில இருக்கும் யாருக்குமே தெரியாது. நான் தனிப்பட்ட மதனா எடுத்தது.
அண்ணாமலை: பிரதர் இதுல 2 விஷயம். தேசம், சமூகம், கட்சி, ஒரு நபரின் பெரிய ஆர்வம். கட்சியை விடுங்க. பாஜவை பிடிக்கும், பிடிக்காமலும் இருக்கலாம். முதல் இரண்டு பாயின்டுகளை லைக் செய்வீர்கள். தேசம், சமூகம், ஒரு நபர் என மூன்றையும் லைக் பண்ணுவீங்க. இதுல நம்பர் 1 முதல்ல. நம்பர் 2 சென்ஷேனல் ஆகணுமா. இது 2தான். ஒரு மனுஷனுடைய அரசியல் வாழ்க்கையை அறுத்து எறிகிறோம். யோசிச்சு பாருங்க. 30 அல்லது 40 வருஷம் கட்சியை சரியாகவோ தப்பாகவோ கட்டமைத்தவர். அதை அறுத்து ஒரே நிமிஷத்துல எறியிறீங்க. இது ஒரு பக்கம். அதுல ஒரு நல்ல காரியம் நடக்குதுனா. அதை உடனடியாக முடிக்கவும். அந்த எறும்பு புத்துக்கு அடிக்கிறா மாறி உடனடியாக அடித்து விடணும். உடனடி நீதி.  நாளை உடனடியாக ஆக்‌ஷன் எடுக்க விரும்புகிறீர்களா? (மதன் மீண்டும் குறுக்கீடு. பிரசாத் மட்டுமே... அண்ணாமலை பேச்சை தொடர்கிறார்)
பாயின்ட் நம்பர் 2. இல்ல. அது கிளீன் பண்ண பார்க்கணும். இதுல சங்கடம் வரக்கூடாது நினைச்சா. பாயின்ட் நம்பர் 2 இஸ் பெட்டர்.
6 மாதம் டைம் ஆகும். இத்துடன் 2வது ஆடியோ முடிகிறது

 மீண்டும் மதன் பேசுகிறார். பாரம்பரியத்தையும், மரபையும் கட்டி காக்கும் பாஜவில், பொறுப்பிலும் நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஆனா, இந்த வீடியோ போட்டவுடன் எனக்கு வேலை போய்விடும் என்று சொன்னவுடனே, அவர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் உங்களை தூக்க மாட்டார்கள் என்றார். நானே, 2 உரிமையாளர்களிடம் நேரடியா பேசினேன். அவர்கள் என்னிடம் கேட்டது அண்ணாமலை இந்த மாதிரி நடக்கலையா. என்னிடம் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்கும் போது என்னிடம் வார்த்தை இல்லை. இது ஒரு ஆடியோ. இன்னும் 10 ஆடியோ.. இங்கு பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று பல இடங்களில் வலியுறுத்துகிறார்கள். முக்கியமா காயத்ரி ரகுராம் மற்றும் குஷ்பு   பற்றி அவங்க வரும் போது இந்த கதவையே டிரான்ஸ்பரன்ட் பண்ணி இருக்கேன். நான் எல்லாரையும் இங்க நிறுத்தி வெச்சுலாம் பேசலனு சொல்றாரு.

3வது ஆடியோவை வெளியிடுகிறார்
 அண்ணாமலை: நான் ஒரு பத்திரிகையில போய் பேசுனேன். இந்த மாதிரி ஸ்டோரியலாம் எழுதாதீங்கனு சொன்னேன். என்கிட்ட ஒரே கேள்வி அவங்க கேட்டது, அப்போ கமலாலயத்தில் எதுவும் நடக்கவில்லை அல்லது தலைவர்களால் நடந்து இருக்கும் என்று சொல்ல வேண்டியதுதானே என்று கூறினார்கள். அதெல்லாம் சொல்ல முடியாது. அது என்னுடைய வேலை இல்லை. நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. தனி நபர் விருப்பம், பிராமின் பார்ட்டி என்று எந்த காரணமும் கிடையாது. இதேதான் என்னை அவங்க 2 பேரும் கேட்டாங்க. இரண்டு பேரையும் தனித்தனியாக பார்த்தேன். அப்போது அவங்க சொன்னது, இந்த விஷயம் கட்சியில் நடக்கவில்லை என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள். நான் சொல்ல மறுத்துவிட்டேன். இத்துடன் 3வது ஆடியோ முடிகிறது.

 தொடர்ந்து மதன் பேசுகிறார்.  இந்த வீடியோ வெளியிடுவதற்கு முந்தைய நாள் நான் அண்ணாமலையை  2வது முறை சந்திக்கும் போது தெளிவாக அவர் சொல்கிறார், இந்த வீடியோவை போட்டு விடுங்க. நேரில் சொன்னது. வாட்ஸ் அப் சாட் ஆதாரத்திற்காக  போட்டேன்.  நேரில் சொல்லும் ஆடியோ இருக்கு. வெளி பொண்ணுங்களா இருந்தா கூட உங்க கையில் கால்ல விழுந்து பேரம் பேசி இருப்பேன். இது கட்சிக்கார பொண்ணு. குட்டி ஸ்கிரீன்ல இருக்கிற முகம் தெரியாத பொண்ணு ஜஸ்டிஸ் வேணும்னு தெளிவா சொல்றாரு. அவருக்கு (அண்ணாமலை) கரேஜ் இல்லையாம். கரேஜ் என்றால் என்ன. வீரம் இல்லையாம். அவர் ஒரு கோழையாம். இவர்தான் கர்நாடக சிங்கம். இவரை நம்பி நீங்கள்லாம் ஹீரோ பட்டம் கட்டிட்டு இருக்கீங்க இல்லையா. ஒரு கட்சிக்கார பொண்ணுக்கு பிரச்னைங்க. அந்த பொண்ணு மேல் தப்போ.. அவரு மேல தப்போ.. கூப்பிட்டு நிறுத்தி கேட்க முடியாது. இவர் தான் சிங்கம். இவரு ஒரு கேசவநாயகம் பிம்பம், இவருக்கு பின்னால் சுத்துறதுக்கு ஒரு 4 பேர். அந்த ஆடியோவை கேளுங்க.

4வது ஆடியோவை வெளியிடுகிறார்.
அண்ணாமலை: எந்த பெண்ணாக இருந்தாலும் நான் உங்களிடம் பேசி இருப்பேன். கையில, கால்ல விழுந்து இருப்பேன். பேரம் பேசி இருப்பேன். கட்சி பெண்ணாக இருப்பதால், பேரம் பேசவோ, வேண்டுகோள் வைக்கவோ தைரியம், மனசு இல்லை.இத்துடன் இந்த ஆடியோ முடிகிறது.
 மீண்டும் மதன் பேசுகிறார். குஷ்பு, காயத்ரி ரகுராம் வந்தா கூட நான் தனியா சந்திக்க மாட்டேன். இப்படி சொல்றாருனா அப்போ இவரு என்ன பார்வையில் கட்சியில் உள்ள பெண்களை பார்க்கிறார்? டிரான்ஸ்பரன்ட் ஆக்குறது முன்னாடி, இந்த ரூம்முல என்னென்ன நடந்து இருக்கும் என்று ஒருவித ஐயத்தோடு சொல்கிறார். டிரான்ஸ்பரன்ட் செய்ததை ஒரு புரட்சியா சொல்கிறார். அப்போ, இதுக்கு முன்னாடி மூடி போட்டு கதவு வெச்சுட்டு இருந்தவங்க எல்லாம் தப்பு பண்ணாங்கனு சொல்கிறாரா? அப்போ அவரும் கொள்கை முரணானவர் தானே. அவரையும் கட்சியை விட்டு தூக்குங்க. அவரு பேசின ஆடியோவை கேளுங்க.

5வது ஆடியோவை வெளியிடுகிறார்.
அண்ணாமலை: டிரான்ஸ்பரன்ட் டோர்(கதவு). நான் பாஜ தலைவரான உடனே இந்த டோரை கழட்டிடேன். ஏன், என்றால் இந்த ரூமுக்குள் நிறைய நடந்துள்ளது. இப்போ இந்த டோரை பாருங்க. ஆபீஸ் உள்ளே எல்லா தொண்டனும் தலைவனை பார்க்கலாம். நான் எந்த ஒரு பெண்ணையும் தனியாக அறையில் நுழைய அனுமதிக்க மாட்டேன். காயத்ரி ரகுராம், குஷ்பு  போன்று யார் வந்தாலும். இந்த டோர் ஓபனாக இருக்கணும். ஒரு பையன்  நிக்கணும். யாராவது பர்சனலாக பேச வேண்டும் என்றால், யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் டோர் ஓபனில்தான் இருக்கும். பேசுங்கள்  என்று கூறுவேன். சிசிடிவியும் இருக்கிறது. நான் முதல்ல பண்ணது இந்த டிரான்ஸ்பரன்சி. எப்போவும் பிரவுன் டோரும், இதுவும் ஓபன்ல இருந்தா, வருபவர்களுக்கு எல்லாம் நம்ம தலைவன் உட்காந்து பேசிக்கிட்டு இருக்காருனு தெரியும்.  இத்துடன் 5வது ஆடியோ முடிகிறது.

 6வது ஆடியோவை வெளியிடுகிறார்.
அண்ணாமலை: நீங்க கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க.
வெண்பா: ஓகே அண்ணா நீங்க இருக்கீங்கள்ல அண்ணா.
(யாரோ உள்ளே வருகிறார்கள். அண்ணாமலை வரவேற்கிறார். நான் கோயம்புதூரில் உங்களை பார்த்தேன் என்று வெண்பாவை பார்த்து சொல்கிறார். எப்படி போயிட்டு இருக்கு பொன்னியின் செல்வன் என்று கேட்கிறார்).
வெண்பா: ஹம்ம்ம்.. சூட்லாம் முடிஞ்சுடுச்சு..
அந்த நபர்: டயலாக்ஸ் எல்லாம் நீங்க எழுதி இருக்கீங்களா.
வெண்பா: இல்லை. இல்லை. சாங்க்ஸ் எழுதி இருக்கேன்.
அந்த நபர்: பொன்னியின் செல்வன் வந்ததற்கு அப்புறம் நீங்க வேற லெவல் போயிடுவீங்க..
 (இடையே அண்ணாமலையுடன் 6 மாதமாக என்று மதன் பேசுகிறார். ஆனால், சரியாக கேட்கவில்லை).
 இத்துடன் அந்த ஆடியோ முடிகிறது.
அண்ணாமலை குறித்து மதன் வெளியிட்ட இந்த  அடுக்கடுக்கான ஆடியோக்கள் வெளியானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஆடியோ குறித்து விளக்கம் பெற தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை  தொடர்புகொண்டபோது அவரது செல்போன் எல்லா நேரத்திலும் தொடர்புக்கு வெளியே  இருந்தது.

சி.டி.ரவியை போட்டுக்கொடுத்த அண்ணாமலை
‘‘தமிழகத்தில் பல பெண்கள் புகார் தெரிவிக்கிறாங்க. உங்களுக்கு ஆர்டர் போடுற முக்கிய தலைவருக்கு இந்த வீக்னஸ் இருக்கு’’ என்று மதன் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அண்ணாமலை, ‘‘தமிழ்நாட்டில இல்ல. கர்நாடகா தலைவருக்கு. சி.டி.ரவி என்று மெதுவாக பேசுகிறார்கள். (அதன்பின் ஆடியோ கட் ஆகிறது). இதைவிட நிறைய பேர் கேவலமாக எல்லாம் சொல்கிறார்கள்’’ என்று கூறுகிறார்.

எச்.ராஜா பாணியில் அண்ணாமலை
எச்.ராஜா சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு பிரச்னை ஏற்பட்டால், ‘‘அது நான் போடவில்லை என்னுடைய அட்மின் போட்டார்’’ என்பார். அதேபாணியை தற்போது அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து மதன் கேள்வி எழுப்பியபோது, ‘‘இதை நான் அடிக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் தான் தயார் செய்து கொடுத்தேன். இதற்கு ஒரு டீம் இருக்கு. அவங்கதான் மாற்றி இருப்பார்கள். கையெழுத்து மட்டும்தான் நான் போட்டேன். இதுக்கு மேல் இந்த விவகாரத்தை சென்சேஷன் செய்ய வேண்டாம்’’ என்று பேசிய ஆடியோ பதிவாகி உள்ளது.

தலைவரும், கே.டி.ராகவனும்
பொண்ணு கூட தனியா இருந்தாங்க..
மதன் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில், ஒரு மாவட்ட பாஜ மகளிரணி தலைவியிடம் அவர் பேசும் உரையாடலை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மாவட்ட தலைவியா இருக்கிற எனக்கே இந்த நிலைமைனா. பொதுமக்களுக்கு இவங்களால என்ன பிரச்னை வரும். கே.டி.ராகவன், மகேஸ்வரிக்கு ரொம்ப குளோஸ்ங்க... இப்போ கடைசியா எல்லாம் அமைதியா இருந்ததற்கு காரணம் என்னனு நினைக்கிறீங்க. அவரு தலையிட்டு இருக்காரு. அவரு சொல்லிதான் எல்லாரும் அமைதியா இருந்தாங்க. அவரு என்ன சொல்லி இருக்காரு. இந்த பிரச்னையை (கொலை மிரட்டல்) அப்படியே விட்டுடுங்க. அவங்க இரண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சு பேசி லெட்டர் எழுதி வாங்குங்க. அவங்க கிட்ட என்ன நடந்ததுனு கேட்டு வாங்குங்க. இவங்கிட்ட மன்னிப்பு எழுதி வாங்குங்க. நான் என்ன நடந்ததுனு எழுதி கொடுத்தேன்.

அந்த லேடி மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியாதுனு சவால் விடுறாங்க. துணை தலைவியா இருக்கும் கொடி என்ற ஒரு பொண்ணு, மகேஸ்வரி கூட இருக்கு. அந்த பொண்ண கையில் வெச்சுக்கிட்டுதான் இந்த லேடி எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கா. இப்போ அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவகாரத்து ஆகிடுச்சு. இப்போ ஒருத்தன கூட்டிட்டு வந்து வீட்டில் வெச்சு குடும்பம் பண்ணிட்டு இருக்கு. கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிட்டு. அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. உடனே, அந்த பொண்ணு வீட்டிற்கு கே.டி.ராகவன் போயிருக்காரு. அந்த பொண்ணு தனியாத்தான் இருக்குது. இது பெரிய பிரச்னை ஆகிடுச்சு. தலைவரும் ஒரு தடவை போயிருக்காரு. கே.டி.ராகவனும் போயிருக்காரு. தனியாவே மீட் பண்ணி இருக்காங்க. அந்த பொண்ணு கூட ஒன்னா இருந்த மாதிரி தெரிஞ்சு போய் பிரச்னை ஆகிடுச்சு. இது தெரிஞ்சு அந்த பொண்ண கல்யாணம் பண்ண போற பையன் (ஆக்சிடென்ட் ஆனவர்) கமலாலயம் போய் எல்லார் முன்னிலையிலும் கே.டி.ராகவனுடன் சண்டை போட்டிருக்கான். இப்போ சிவசங்கர் பாபா விஷயத்தில் கே.டி.ராகவன் பெயர் வந்துச்சுல. அதுக்கு அப்புறம் இந்த விஷயம் வந்திருக்கு. முக்கிய நிர்வாகிகள் பட்டியலே இருக்கு என்கிட்ட. அவங்க யார் யார் பார்த்தாங்க, யார் யார் இருந்தாங்கனு எல்லாமே என்கிட்ட இருக்குது என பேசியிருக்கிறார்.

பேரம் பேசியவன் சிங்கமா?
வீடியோ வெளியிடுவது தொடர்பாக மதனுடன் அண்ணாமலை பேசும் ஆடியோவில், ‘‘தமிழ்நாட்டில் யாரும் செய்யாததை நீங்கள் செய்து உள்ளீர்கள். செங்கல்பட்டு மாவட்டம் என்னங்க. நீங்க மாவட்ட செயலாளராக இருந்தீங்கனா உங்களுக்கு கீழே 10 பேர் இருப்பான். பொதுச்செயலாளர் மூன்று பேர், துணைத்தலைவர் மூன்று பேர். 2026 எம்எல்ஏ தேர்தலில நீங்க நிப்பீங்க. சொல்றதை கேளுங்க. அப்போ உங்களுக்கு கட்சியில இப்போ பொறுப்பு வேண்டும். அதுக்கான வேலையைதான் நீங்க இப்போ பார்க்கணும். நாளை காலை ஒன்றும் நடக்காது. இது 5 ஆண்டு திட்டம். மாநில அளவில் பொறுப்பு உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்.

 கவலைப்படாதீங்க. புதிதாக ஒரு பிரிவை உருவாக்க முயற்சித்து வருகிறேன். இலக்கிய பிரிவு என்று ஒன்று புதிதாக ஆரம்பிக்கிறோம் வெச்சுகோங்க. அதுல தமிழ் வளர்ச்சி பிரிவை இரண்டாக பிரித்து தமிழ் வளர்ச்சி இலக்கிய பிரிவு பிரிக்கிறோம் என்று வெச்சுக்கோங்க. எனக்கு நீங்க என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. உங்க கட்சி வளர்ச்சிக்கு நான் என்ன பண்ணனும் உங்க சகோதரரா. இதோடு நான் எதுவும் கேட்க முடியாது. உங்களை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டுமென்றாலும் நான் செல்கிறேன். ஏ.என்.எஸ். பிரசாத்தை நான் வெளியேற்றி விட்டேன். அவருடைய ராஜினாமா கடிதம் என்னுடைய டேபிளில் இருக்கு. என்னை பற்றி தமிழிசை மேடம் கிட்ட சொல்லி கீழே விழுந்து கால் உடைந்து இப்போ ஆஸ்பிட்டலில் படுத்திருக்காரு. 3 இடத்தில் எலும்பு உடைந்திருக்கு’’ என்று பேசி உள்ளார்.

 இதுகுறித்து கூறும் மதன், என்னை மிரட்ட கால் உடைந்துவிட்டது என்று சொல்கிறார். இதே மெட்ராஸ்ல பொறந்து வளர்ந்தவன் நான். நீ என்ன பண்றீயோ, பண்ணீக்கோ. பேரம் பேசுறேன்னு என்னை சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சி பிரிவு என்று யார் பேரம் பேசினா? பேரம் பேசுறவன்லாம் சிங்கமா என்று ஒருமையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.   

பொறுக்கிகள் பண்றதை பார்த்து சுகம் காண்கிறார்
வீடியோவில் மதன் பேசுகையில், ‘‘இதற்கு முன் பாஜ தலைவர்களாக இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு தன்மை இருந்தது. ஆனால், இவன் (அண்ணாமலை) சின்ன பிள்ளையை போன்று விளையாடுகிறான். வீடியோ பார்ப்பதற்கு முன்பு ஒரு பேச்சு. பார்த்த பின்பு ஒரு பேச்சு. இவனை விட்டா பாஜ சுத்தமா கண்டம் ஆகிடும். ஏற்கனவே, அது கண்டமாதான் இருக்குது. இவன் டோட்டலா கண்டம் பண்ணிடுவான். ஒரு பத்திரிகை உரிமையாளர் சொன்னாங்க. இங்கு நிறைய பாலியல் அத்துமீறல் நடக்குது. என்கிட்ட கேட்டாங்க, அண்ணாமலை நீங்க இல்லை என்று சொல்வீங்களா. நான் யாருக்கும் வக்காலத்து வாங்க முடியாது என்று சொல்லிவிட்டு வந்துட்டேன் என்று அண்ணாமலை சொல்கிறார்.  

இங்க நடக்குறது என்னை விட அதிகமாக தெரிகிறது. கொள்கைக்கு முரணாக பேசியது அவர்தான். ஒன்னு நடக்குதுனு தெரிஞ்சா, சிங்கம் என்று பெயர் வாங்குனவரு எதிர்த்து கேள்வி கேட்டு நடவடிக்கை எடுத்து இருக்கணும். நடவடிக்கை எடுக்காம வேடிக்கை பார்க்கிறது சிங்கம் கிடையாது. அதற்கு பெயர் வேற. இங்க இருக்கிற சில பொறுக்கிகள் பண்றாங்க. அந்த பொறுக்கிகள் பண்றதை காதாலையும், கண்ணாலையும் பார்த்து சுகம் காண்பவன் நீ. பெங்களூரில் ஒரு டீம்மை வைத்துக்கொண்டு டார்ச்சர் கொடுக்கிறான். வீடியோவில் பிளர் ஆன பேஸை அழிக்க முயற்சிக்கிறான். கட்சி நிர்வாகிகளோட பேஸ் மார்பிங் செய்றான்’’ என்றார்.


நீங்க வீடியோ வெளியிடலனா எனக்கு பெரிய தலைவலி

மதன் மற்றும் வெண்பாவுடன் அண்ணாமலை பேசும் ஆடியோ விவரம்:
அண்ணாமலை: ஒரு பெண்ணை பாதுகாப்பாக வேலை செய்யும் இடத்தில் வைத்திருக்கணும் என்றால் என்ன அட்வைஸ் தருவீங்க.  
வெண்பா, மதன்: தனியா ஒரு கமிட்டி ஸ்டார்ட் பண்ணனும். கமிட்டியில நீங்க தலைவரா இருக்கணும். அதில் 3 அல்லது 4 லேடீஸை போட்டு, தன்னார்வலர்கள்லாம்..
அண்ணாமலை: நீங்க சொல்றது விசாகா கமிட்டி மாதிரியா..
மதன்: கிட்டத்திட்ட..
அண்ணாமலை: வேறு எந்த கட்சியிலும் இந்த மாதிரி குழு இல்லைலா. முதல்ல கமிட்டி அமைக்கணும். அப்புறம் கிளீன் அப் பண்ணனும். கிளீன் அப்புல இந்த கேரக்டர்ஸ்லாம் (கே.டி.ராகவன் மாதிரி ஆட்களை) ஓரம்கட்டணும்.
வெண்பா: இந்த புகாருக்குனு ஒரு துறையை போடுங்க.
அண்ணாமலை: போட்டு என்ன பண்ணுவீங்க. எவ்வளவு பேர் புகார் தருவாங்க.
மதன்: அவங்கள கூப்புடுங்க. நம்ம மூன்று பேரும் உட்காந்து பேசுவோம். ஏன் இப்படி பண்றீங்கனு கேட்போம்.
வெண்பா: ஏன்னா பூனைக்கு ஒருத்தர் மணி கட்டி ஆகணும்.
அண்ணாமலை: இப்போ வீடியோவுல இருக்கிற ஒருத்தர் தனியா நாளைக்கு கூப்புடனும்னா யாரை கூப்புடுறது?. எப்படி பண்ணனும் நீங்க தான் சொல்லணும். ஏன்னா, இதை வெளியிட்டா நாளைக்கு எல்லாரையும் கட்சியில் இருந்து நீக்கணும். இன்னும் சில மணி நேரங்களில். நீங்கள் வெளியிடாமல் இருந்தா எனக்கு தலைவலி பெருசு. நான் நாலு பேருகிட்ட காமிச்சு. சமாதானம் செய்து கொண்டு வந்து, அப்புறம் ஒவ்வொரு மாசமா இரண்டு இரண்டு பேரா நீக்கி 6 மாசத்துல இதலாம் பண்ணனும்.  நான் சொல்றது உங்களுக்கு புரியதா?. இதை போட்டுங்கீனா ஒரு வருஷத்திற்கு யாரும் வர மாட்டாங்க.
இவ்வாறு உரையாடல் முடிகிறது.
பின்னர் மதன் பேசுகையில், இந்த வீடியோ போட சொன்னது யார், அவன் (அண்ணாமலை). பப்ளீஷர் மட்டும்தான் நான். இன்ஸ்ரக்டர் அவன். ஏன் இன்ஸ்ரக்டர் ஆகுறா. அந்த கட்சியில் நான் அப்போ உறுப்பினர். அந்த ஆளு சொன்னான் நான் போட்டேன். நாங்க தலைவர்கிட்ட கொண்டு போறோம். அவரு கண்டிப்பாக இதுக்கு ஒரு காரணத்தை வெச்சு இருக்காரு. இளம் தலைவராக இருக்கிறதுனால நம்பி இறங்கினேன். உங்க கட்சியில் பதவி வாங்கி நான் என்ன பண்ண போறேன். அவன் பேசும்போது கூட உஷாரா பேசுனான். பாக்கெட்டில் மைக் இருக்கிறது பார்த்து பேச்சை முடித்து கொண்டான்’’ என்றார்.


Tags : Annalayan ,Raddin , Story, Screenplay, Narration, KD Raghavan Porn Video, Annamalai Audio Release
× RELATED சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ....