×

ஊத்துக்கோட்டையில் ரூ.1.50 லட்சம் குட்கா கார் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் கார் ஒன்றில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தனிப்பிரிவு எஸ்.ஐ. பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் ஹன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த கார் யாருக்கு சொந்தமானவை என போலீசார் விசாரித்ததில், அவை அதே பகுதியில் வசிக்கும் சத்ராராம் (25 )  என்பது தெரியவந்தது.  மேலும், அவரை போலீசார் விசாரித்ததில், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், அவைகளை பறிமுதல் செயது ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், குட்கா வழக்கில் சத்ராராமின் உறவினர் துக்காராம் (27 ) என்பவரையும் கைது செய்தனர். மேலும், மேற்கண்ட 2 நபர்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை செய்தனர். பின்னர், சத்ராராம் மற்றும் துக்காராம் ஆகிய 2 பேர் மீதும்  ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரையும்  ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 44 கிலோ குட்காவின் மதிப்பு காருடன் சேர்த்து ரூ. 1.50 லட்சம் என கூறப்படுகிறது.


Tags : Gutka ,Uthukottai , Uthukottai, Gutka, arrested
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது