சென்னை:அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படிப்புகளில் சேர்வதற்காக 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்காக 2 ஆயிரத்து 426 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்று சரிபார்ப்பு 23ம் தேதி முதல் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. இந்நிலையில், 27 மற்றும் 28ம் தேதிகளில் 282 பேர் சான்று சரிபார்ப்புக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், இ-மெயில்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகவல் வரவில்லை என்றாலும் சனிக்கிழமை நேரில் வந்து பங்கேற்கலாம். இவ்வாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.