×

சூளைமேட்டில் யார் பெரிய ரவுடி? ரவுடி எலி கார்த்திக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பி சென்ற 2 பேர் செல்போன் பறித்தப்போது பொதுமக்கள் தர்ம அடி

சென்னை: சூளைமேடு நமச்சியவாயபுரம் சமயபுரத்தம்மன் கோயில் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் அந்த வாலிபரை மறித்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். சுதாரித்து கொண்ட அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், 2 பெட்ரோல் குண்டுகளை வாலிபர் மீது வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக வாலிபர் உயிர் தப்பினார். பெட்ரோல் குண்டு தப்பிய 2 பேரும், வட அகரம் மேம்பாலம் அருகே சாலையில் நடந்து சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜனபால் மதுசூதன ரெட்டி என்பவரை வழிமறித்து செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயன்றனர்.

அப்போது, இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து மக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார், பொதுமக்கள் பிடியில் இருந்த 2 பேரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், இருவரும் சூளைமேடு ஜெயலட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (20) மற்றும் இவரது நண்பர் நமச்சிவாய புரத்தைச் சேர்ந்த காதா சாம்ராஜ் (19) என்பதும், இவர்களை ரவுடி எலி கார்த்திக் நேற்று முன்தினம் மிரட்டியதாலும், சூளைமேடு நமச்சியவாயபுரத்தில் யார் பெரிய ரவுடி என்ற மோதலிலும் எலி கார்த்திக்கை கொலை செய்யும் நோக்கி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. இது குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவடி கார்த்திக் மீது பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Choolaimedu ,Rowdy Eli Karthik , Who is the biggest rowdy in Choolaimedu? Petrol bomb blast on Rowdy Eli Karthik: 2 fugitives snatch cell phone
× RELATED பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது