×

படைக்கல தொழிற்சாலையில் திருச்சி அசால்ட் ரைபிளின் புதிய வகை அறிமுகம்

திருச்சி: திருச்சி படைக்கல தொழிற்சாலையில் திருச்சி அசால்ட் ரைபிளின் புதிய வகை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.75வது சுதந்திர தின நினைவாக திருச்சி படைக்கல தொழிற்சாலையில் திருச்சி அசால்ட் ரைபிளின் கீழ் மடிப்பு பட் வகை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. படைக்கல தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர், சஞ்சய் திவேதி புதிய வகை துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இதில் கூடுதல் பொது மேலாளர் ராஜிவ் ஜெயின், ஏ.கே.சிங், இணை பொது மேலாளர்கள் வி.குணசேகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

7.62x39 மிமீ அளவு கொண்ட திருச்சி அசால்ட் ரைபிள் டிஏஆர் ஒரு சக்திவாய்ந்த தனிப்பட்ட தானியங்கி துப்பாக்கி ஆகும். இது ஒற்றை மற்றும் தானியங்கி துப்பாக்கி சூடு முறையில் எதிரிகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண முறையில் ஒற்றை ஷாட் ரைபிள் ஆகும். இதனை பர்ஸ்ட் மோடிலும் பயன்படுத்தப்படலாம். குறுகிய தொடர் முறையில் பயன்படுத்துவதன் மூலம் 500 மீ வரையில் உள்ள குழு அல்லது ஒற்றை இலக்குகளை அழிக்க முடியும். இருப்பினும், டிஏஆர் இன் அழிவு விளைவு 1350 மீ வரம்பில் உள்ளது. சிஏபிஎப் பிரிவுகள், மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் விரைவான மற்றும் எளிமையான இயக்கத்திற்கு டவுன் மடிப்பு பட் பதிப்பு தேவைப்படுவதால் படைக்கல தொழிற்சாலை இந்த பதிப்பை தயாரித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த நீளம் திறந்த நிலையில் 900 மிமீ மற்றும் மடிப்பு 650 மிமீ ஆகும். திருச்சி படைக்கல தொழிற்சாலையில் ஏற்கனவே நிலையான பட் மற்றும் பக்க மடிப்பு பட் ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.



Tags : Armament , Trichy Assault Rifle at the Armament Factory Introducing the new type
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது