×

மியான்மரிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.7 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக சென்னைக்கு மெத்தாபெட்டமைன் என்ற போதைப்பொருள் சாலை மார்க்கமாக கடத்தி வருவதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் அதிகாரிகள் சுங்கச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரனோடை சுங்கச்சாவடி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.  

அதில், ஒரு கிலோ வீதம் 8 பாக்கெட்டில் 8 கிலோ மெத்தாபெட்டமைன் இருந்தது தெரியந்தது. டிரைவர் ஜெகதீஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரமேஷ் என்பவர்களுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். அதன்படி மாரியப்பன் மற்றும் ரமேஷ் ஆகியோ கைது செய்தனர்.  விசாரணையில் இருவரும் சில ஆண்டுகள் மணிப்பூர் மாநிலத்தில் தங்கி வேலை செய்யும்போது,  சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் போதை பொருள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  மேலும், மியான்மரிலிருந்து கடத்திய ரூ.7 கோடி மெத்தாபெட்டமைன், லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags : Myanmar ,Chennai , Myanmar, drug, arrested
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்