×

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை: காரைக்குடியில் பரிதாபம்

காரைக்குடி: கணவர் இறந்த துக்கத்தில் மறுநாள் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்வகுமார்(26). இவரது மனைவி நித்யா(26). செல்வகுமார்- நித்யா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதி குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் செல்வகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   

இது குறித்து நித்யா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நித்யா நேற்று காலை 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மறுநாள் காதல் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Karaikudi , Wife commits suicide in mourning over husband's death: Pity in Karaikudi
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க