டெல்லி: டெல்லியில் இன்று மீண்டும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணைக்கு அனுமதி கோர உள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெறுவதற்காக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி செல்கிறார்.
நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பலரை அவர் சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளார். அப்போது மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை பொம்மை சமர்ப்பிக்க உள்ளார்.
கர்நாடக முதலமைச்சருடன் அம்மாநில அரசு உயர் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாது அணைக்கு அனுமதி பெற்றிட அடுத்தடுத்து கர்நாடக அரசு முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.